Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்து வரும் இணைய குற்றம்: 6.69 லட்சம் சிம் கார்டுகளை முடக்கிய மத்திய அரசு..!

Siva
வியாழன், 19 டிசம்பர் 2024 (07:49 IST)
இந்தியாவில் இணைய குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு 6.69 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகளையும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஐஎம்இஐ எண்களையும் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அதே நேரத்தில், இணைய குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மோசடி பேர்வழிகள் ஆன்லைன் வழியாக மிரட்டி பணம் பறிப்பது, டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் பணம் பறிப்பது ஆகியவை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், கடந்த நவம்பர் 15ஆம் தேதி வரை 6.69 லட்சத்துக்கு அதிகமான சிம் கார்டுகள் மற்றும் ஒரு லட்சத்து 32 ஆயிரம் எம் ஐஎம்இஐ எண்களையும் முடக்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சாவித்திரி தாக்கூர் அவர்கள் ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுப்பதற்காக மத்திய அரசு 131.60 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும், இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments