Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் தர மறுத்ததால் விவசாயியை தாக்கிய வருவாய் அலுவலக ஊழியர்கள்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (15:33 IST)
தெலிங்கானாவில் லஞ்சம் கொடுக்க மறுத்த விவசாயியை வருவாய் அலுவலக அதிகாரிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலிங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டா பாஸ்புக்கை வழங்கக் கோரி வாரங்கல் வருவாய் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
 
பலமுறை அலைந்த போதிலும் அவருக்கு பாஸ்புக் கிடைக்கவில்லை. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ஆகும் என கூறியுள்ளனர் வருவாய் துறை அதிகாரிகள். இதனால் விரக்தியடைந்த அந்த விவசாயி, வருவாய் துறை அதிகாரியின் சட்டையை பிடித்துள்ளார்.
 
உடனே அவரை பிடித்து உள்ளே இழுத்து வந்த அதிகாரிகள் சிலர் வயதில் மூத்தவர் என்றும் பாராமல் அவரை தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த விஷயம் சீரியசாகவே, இதுகுறித்து விசாரணை நடத்தி குறிப்பிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments