Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டு. ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (05:10 IST)
காகிதங்களால் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுக்கள் ஒருசில வருடங்களில் பாதிப்பு அடைந்து உபயோகிக்க முடியாத நிலை ஏற்படும் நிலையில் ரூபாய் நோட்டுக்களை வெளிநாடுகளை போல பிளாஸ்டிக்கினால் அச்சடிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில வருடங்களாக எழுந்து வருகின்றது.


 


அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டே இதற்கான திட்டத்தை ஒருசில நகரங்களில் மத்திய அரசு சோதனை மேற்கொள்ள இருந்தது. ஆனால் எதிர்பாராத காரணத்தால் அப்போது அது நடைபெறவில்லை

இந்நிலையில் தற்போது இதற்கான ஆயத்தபணிகள் ஆரம்பமாகிவிட்டது. முதல்கட்டமாக பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கிவிட்டது.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, “நாட்டின் 5 பகுதிகளில் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடித்து சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கத் தேவையான மூலப்பொருள்களை கொள்முதல் செய்யவும், பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments