அழகிகளை தேடும் 240 இணைய தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்தியர்களை குறிவைத்து, இணையதளங்கள் மூலம் அழகிகளை விபச்சாரத்திற்கு அனுப்பி வைக்கும் கும்பல் ஏராளமாக செயல்பட்டு வருகிறது. அந்த விளம்பரங்களில் அழகிகளின் தொலை பேசி எண்ணும் வெளியிடப்படுகின்றன.
இதுபோன்ற இணையதளங்கள் மூலம், பல்வேறு குற்றங்களும், மோசடிகளும் நடைபெற்று வருவதாக மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தது. எனவே, இதையடுத்து, அப்படி செயல்படும் 240 இணைய தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
ஆனால், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதுதான், இதுபோன்ற குற்றங்களை தடுக்க சரியான வழியென்றும், இணைய தளங்களை முடக்குவதால் எந்த பலனும் இல்லை என்று தொழில் நுட்ப துறையை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.