Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தை கூகுள் பே பெறவில்லையா? டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (08:39 IST)
பணபரிமாற்றம் செய்ய உதவும் செயலியான கூகுள் பே’ பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தை பெறவில்லை என்று பொதுநல வழக்கு ஒன்றை நிதி பொருளாதார அறிஞர் அபிஜித் மிஸ்ரா தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.என்.படேல், பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது ஆஜரான ரிசர்வ் வங்கியின் வழக்கறிஞர் வி.கிரி, ‘‘கூகுள் பே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள உதவும் செயலி என்றும் அதில் எந்தவித விதிமீறலும் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
மேலும் கூகுள் பே என்பது ஒரு செயலியை அளிக்கும் 3-ம் தரப்பு சேவை நிறுவனம் மட்டும்தான் என்றும், பணப் பரிவர்த்தனைக்கென தனி சிஸ்டம் எதையும் அது உருவாக்கி செயல்படுத்தவில்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
ஆனால் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாயல் பாஹல், பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தை கூகுள் பெறவில்லை என்று குறிப்பிட்டதை அடுத்து இதுகுறித்து விரிவான விசாரணை ஜூலை 22-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments