Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரு பிறந்தநாளை மறந்த கூகுள் முதல் பெண் வழக்கறிஞர் பிறந்தநாளுக்கு டூடுள்

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (16:34 IST)
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பிறந்தநாளான நேற்று துளையிடும் கருவியின் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் இன்று இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னெலியா சோராப்ஜியின் பிறந்தநாளை டூடுள் வெளியிட்டு கொண்டாடி வருகிறது.


 

 
நேற்று இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவரது பிறந்தநாள் இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கூகுள் நேருவின் பிறந்தநாளுக்கு பதில் துளையிடும் கருவியின் பிறந்தநாளுக்கு டூடுள் வெளியிட்டு கொண்டாடியது.
 
இந்நிலையில் இன்று இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னெலியா சோராப்ஜியின் பிறந்தநாளுக்கு டூடுள் வெளியிட்டுள்ளது. கார்னெலியா சோராப்ஜி இந்தியாவின் பட்டப்படிப்பு முடித்த பின்னர் லண்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதல் பெண்மணி. 
 
சட்டம் பயின்று இருந்தாலும் பெண்கள் வழக்கறிஞராக செயல்பட இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பின்னர் 1924ஆம் ஆண்டு முதல்முறையாக பிரிட்டன் ஆட்சியில் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments