Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உரிய நேரத்தில் கிடைக்காத ஆக்ஸிஜன்; பறிபோன 26 கொரோனா நோயாளிகள்! – கோவாவில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 12 மே 2021 (08:11 IST)
கோவா அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால் 26 கொரோனா நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வரும் நிலையில் கோவாவிலும் அப்படியான துயர சம்பவம் நடந்துள்ளது.

கோவாவில் பனாஜி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு எழுந்ததால் நேற்று ஒருநாள் இரவிற்குள் 26 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள மாநில சுகாதார மந்திரி விஷ்வஜித் ரானே ”மருத்துவமனையில் ஆக்ஸிஜன் விநியோக பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்தது உண்மைதான். 1200 ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தேவை இருந்த நிலையில் 400 சிலிண்டர்கள் மட்டுமே சப்ளை செய்யப்பட்டன. கொரோனா சிகிச்சை மேற்பார்வை குழு இதுகுறித்து தனது கருத்துகளை முதலமைச்சருக்கு வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments