Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞானவாபி மசூதி- இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி

Sinoj
புதன், 31 ஜனவரி 2024 (16:19 IST)
உத்தரபிரதேசம் மாநிலம் ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் எனவும், பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் செய்து தர உத்தரவிட்டுள்ளது.

மேலும், அடுத்த ஏழு நாட்களுக்குள் பூஜைகள் நடத்தப்படும் என இந்து பிரிவு அறிவித்துள்ளது.

காசி விசுவநாதர் கோயில் அறக்கட்டளைக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஞானவாபி மசூதி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments