Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறை அதிகாரி: வைரல் வீடியோ

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறை அதிகாரி: வைரல் வீடியோ
, வியாழன், 17 மார்ச் 2016 (11:39 IST)
பீகார் மாநிலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறை அதிகாரியை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


 


பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்திலுள்ள சிறைச்சாலையில் சூப்பிரண்டன்டாக பணிபுரிந்தவர் கிரிபா சங்கர் பாண்டே.
 
இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பரபரப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி பீகார் மட்டுமன்றி நாடு முழுவததிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதைத் தொடர்ந்து, அந்த சிறைத்துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், விசாரணை அறிக்கை வரும் முன்னரே சிறைத்துறை அதிகாரி பாண்டேவை பணி இடைநீக்கம் செய்ய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் பாண்டே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

நன்றி : இந்தியா டிவி

Share this Story:

Follow Webdunia tamil