Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் இளம்பெண் கற்பழிப்பு : பெங்களூரில் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2015 (14:40 IST)
ஒடும் பேருந்தில் 18 வயது இளம்பெண்ணை இரண்டு இளைஞர்கள் கற்பழித்த விவாகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சமீபகாலமாக பாலியல் பலாத்காரங்கள் நாட்டில் தலை விரித்தாடுகிறது. ஏற்கனவே டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அதன் பின்பும், டெல்லி மற்றும் பெங்களூரில் பாலியல் பலாத்காரங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.  
 
இந்நிலையில்,  பெங்களூர் கே.ஆர்.புரம் அடுத்த ஓசக்கோட்டை என்ற புறநகர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். சம்பவ தினத்தன்று பணிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
 
அப்போது  அந்த வழியாக ஒரு தனியார் மினி பஸ் ஒன்று வந்தது. அதில் அந்த பெண் ஏறி அமர்ந்துள்ளார். அந்த பேருந்தில் அவரை தவிர யாரும் இல்லை. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய அந்த பஸ் டிரைவரும், கிளீனரும்  அந்தப் பெண்ணை மிரட்டி கற்பழித்தனர். 
 
மேலும் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிவிட்டு லகொன்டே கிராஸ் பகுதியில் அந்த பெண்ணை இறக்கிவிட்டு சென்று விட்டனர். வலியின் காரணமாக மருத்துவமனியில் சிகிச்சைக்காக சென்றிருக்கிறாள் அந்த பெண். 
 
தகவல் அறிந்த போலிசார் அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!