Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபேஸ்புக் நட்பால் இளம்பெண் கர்ப்பம்: பலாத்காரம் செய்த காதலன்!

ஃபேஸ்புக் நட்பால் இளம்பெண் கர்ப்பம்: பலாத்காரம் செய்த காதலன்!

ஃபேஸ்புக் நட்பால் இளம்பெண் கர்ப்பம்: பலாத்காரம் செய்த காதலன்!
, வெள்ளி, 28 அக்டோபர் 2016 (09:52 IST)
தற்போது சமூக வலைதளமான ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் ஃபேஸ்புக் மூலம் தற்போது காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.


 
 
பல்வேறு சமூக சீரழிவு செயல்களை செய்ய ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். பூனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் இளம்பெண் ஒருவருக்கு காதல் வலைவீசி அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
 
பூனேயை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவன் தானே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கு ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பு கொடுத்துள்ளான். இந்த நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
 
ஃபேஸ்புக்கில் காதல் வளர்த்த அந்த இளைஞன் உன்னை திருமணம் செய்துகொள்வேன் என புனேவிற்கு அழைத்துள்ளான் அந்த பெண்ணை. ஃபேஸ்புக் காதலனின் வார்த்தையை நம்பி சென்ற அந்த பெண்ணை அவன் பாலியல் பலாத்காரம் செய்து இன்பம் கண்டுள்ளான்.
 
இதனால் அந்த பெண் கர்ப்பமாக காதலனின் பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அந்த பெண்ணை நிராகரித்து அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த இளம்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து, அந்த இளைஞன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் தூதர் கைது எதிரொலி : இந்திய தூதரக அதிகாரி வெளியேற பாகிஸ்தான் உத்தரவு