Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன்

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன்
, வியாழன், 20 நவம்பர் 2014 (09:46 IST)
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
உத்தரப் பிரதேசம், சவ்பேபூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 16 ஆம் தேதி இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டின் அருகேயுள்ள வயலுக்குச் சென்றார்.
 
அப்போது, அந்த சிறுமியை பின்தொடர்ந்துச் சென்ற 13 வயது சிறுவன், தனது மகளை கற்பழித்து விட்டதாக சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, அவனை கைது செய்த சவ்பேபூர் நிலைய காவல் துறையினர், வாரணாசி நகரின் ராம் நகர் பகுதியில் உள்ள அரசு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அந்த சிறுவனை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் 2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil