Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் கனமழை.. குடும்பத்துடன் காரில் சென்ற இன்போசிஸ் பெண் ஊழியர் பலி..!

Webdunia
திங்கள், 22 மே 2023 (07:37 IST)
பெங்களூரில் வரலாறு காணாத காண மழை பெய்ததை அடுத்து குடும்பத்துடன் காரில் சென்ற இன்போசிஸ் பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 
 
பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்துவரும் நிலையில் நேற்று இரவு ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பெங்களூரில் உள்ள பெரும்பாலான சாலைகள் மழை நீரால் மூழ்கியது. 
 
இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் பானுரேகா என்ற இளம் பெண் குடும்பத்துடன் ஊரை சுற்றி பார்க்க சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற கார் சுரங்கப்பாதையில் சிக்கியது. இதனை அடுத்து அந்த கார் நீரில் மூழ்கியதால் பானு ரேகா பரிதாபமாக உயிரிழந்தார் 
 
அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் சித்தராமையா பானு ரேகா குடும்பத்தினருக்கு ரூ.5  லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார் மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் ரக சிகிச்சை அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments