Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல பெண்களை சூறையாடிய பாகுபலி நடிகர்....

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (13:25 IST)
தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக பாகுபலி படத்தில் பிரபாஸின் வளர்ப்புத்தந்தையாக நடித்த நடிகர் வெங்கட பிரசாத் மீது ஒரு பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.


 

 
வெங்கடபிரசாத் நடிப்பது மட்டுமில்லாமல், ஹைதராபாத்தில் உள்ள பிரசாத்  ஐமேக்ஸ் மல்டிபிளக்ஸின் மேனேஜராகவும் பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில், அங்கு பணிபுரிந்து வரும் ஒரு பெண் போலீசாரிடம் ஒரு புகார் அளித்துள்ளார்.
 
அதில், கடந்த 7 வருடங்களாகவே பிரசாத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், அதில் இரு முறை தான் கர்ப்பமானதாகவும், ஆனால், வலுக்கட்டாயமாக பிரசாத் கருவை கலைக்க வைத்துவிட்டார் எனவும் புகார் அளித்துள்ளார்.


 

 
மேலும், திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை வலியுறுத்தியும், அதை பிரசாத் தவிர்த்து வருவதாகவும், தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
கணவனிடமிருந்து பிரிந்து வாழும் அப்பெண்ணை, விவாகரத்து பெறும் முன்பே தனது வலையில் பிரசாத் வீழ்த்தி அவரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது வேறு ஒரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருப்பதால், அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
 
இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பிரசாத் பல பெண்களை இப்படி ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்