Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலங்களை மிரட்டும் பேய் மழை! ஒரே நாளில் 34 பேர் பலி!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (08:17 IST)
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஒரே நாளில் பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், டெல்லி, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக உத்தர பிரதேசத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments