Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேய் பிடித்ததாக சொல்லி பெண்ணை கொடுமைப் படுத்தி கொன்ற மந்திரவாதி – இப்படியும் நடக்குமா?

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (08:17 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்பத்தினர் முன்பே பெண்ணை அடித்துக் கொடுமைப்படுத்திக் கொன்றுள்ளார் ஒரு மந்திரவாதி.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு  முன்னர் திருமணம் நடந்துள்ளது. அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பரிசாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையில் அந்த பெண்ணின் பெற்றோர் உயிரிழந்துள்ளனர். அதனால் மன அழுத்தத்துக்கு ஆளான அந்த பெண் மிகவும் சோகமாக காணப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணின் நிலையைப் பார்த்த குடும்பத்தினர் அவரை ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். அந்த மந்திரவாதியோ பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அதை விரட்டுவதாக சொல்லி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரைக் கீழே தள்ளி அவர் மேல் ஏறி உட்கார்ந்து அடித்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் உயிரிழந்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் மந்திரவாதி ஷியாம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலிஸார் ஷ்யாமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments