Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள் : சந்திரபாபு நாயுடு பேச்சு

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (12:06 IST)
சமீபத்தில் தேசிய அரசியலில் கவனம் செலுத்திய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்து பாஜவை வீழ்த்தியே தீர வேண்டுமென பல மாநிலங்களுக்கு சென்றார். சந்திரபாபு நாயுடுவின் இம்முயற்சி  இந்திய அரசியலில் அதிகம் பேசப்பட்டது. விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்றைய தினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
 
கடந்த 10 ஆண்டுகளாகவே ஆந்திராவில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. ஆந்திர மாநில மக்கள் தொகையில் 50 % பேர் இளைஞர்களே உள்ளனர். மக்கள் தொகை குறைவால் மாநிலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைய நேரிடும்.
 
ஆதலால் இளைஞர்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்க பெற்றோர் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மாநில அரசு சார்பில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
 
மேலும் உள்ளாட்சி தேர்தலில் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்கள் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சந்திரபாபு நாயுடு  உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments