Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் வெள்ளத்தில் தவித்த நிலையில் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற கேரள அமைச்சர்

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (07:30 IST)
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல் முகாம்களில் அகதிபோல் தங்கியுள்ளனர். கேரள அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை செய்து வருகின்றது.
 
இந்த நிலையில் கேரளாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வெள்ளத்தில் தவித்து கொண்டிருக்கும் நிலையில் அம்மாநில வனத்துறை அமைச்சர், ராஜு, ஜெர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இது கட்சிக்குள் சலசலப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ராஜூவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளில் இருந்து மட்டுமின்றி ஆளுங்கட்சி பிரமுகர்களும் வலியுறுத்தி வருகின்றனர். 
 
தன்மீதான அதிருப்தி அதிகரித்ததை கேள்விப்பட்ட அமைச்சர் ராஜு, உடனே தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு கேரளாவுக்கு திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் அவர் கேரளா திரும்பியதும் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments