நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்ந்துள்ளது.
தனி நபர் வரியற்ற வருமானம் ரூ.2 இலட்சத்திலிருந்து 2.5 இலட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.
வரிச்சலுகைக்கான முதலீட்டு வரம்பு வருடத்திற்கு 1 இலட்சத்திலிருந்து 1.5 இலட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.
வீட்டுக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டிக்கான சலுகை 1.5 இலட்சத்திலிருந்து 2 இலட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.