Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை செல்லும் பெண்களுக்கு காயத்ரி ரகுராம் கேட்ட கேள்வி

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (20:53 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்த போதிலும் சபரிமலைக்கு செல்ல முயலும் பெண்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதால் அவர்கள் திருப்பி அனுப்பப்படும் சூழ்நிலையே உள்ளது.

இந்த நிலையில் நேற்றும் சபரிமலைக்கு சென்ற பெண்கள் இருவர் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராம் கேள்வி ஒன்றை தனது டுவிட்டரில் எழுப்பியுள்ளார்.

ஐயப்பன் மீது நம்பிக்கை இல்லாத பெண்கள், அங்கு என்ன சாதிப்பதற்காக செல்ல முயற்சி செய்கிறீர்கள்? உண்மையில் உங்களுக்கு ஐயப்பன் மீது நம்பிக்கையும் பக்தியும் இருந்தால் 40 வயதுக்கும் மேல் வரும் வரை பொறுமையாக இருங்கள். ஆண்டாண்டு காலமாக கடைபிடித்துவரும் விஷயத்தை பிடிவாதமாக செய்ய முயற்சிக்க வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

ஐயப்பன் கோவிலுக்கு பக்தியுடன் செல்ல வேண்டும் என்பதே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் சாரம்சமே தவிர, வீம்புக்காக செல்வதை அந்த தீர்ப்பு சொல்லவில்லை என்றும் காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக நெட்டிசன்களும் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments