Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 அடி பேனர் வைத்து பிரபல வீரரை இந்திய கிரிக்கெட் அணிக்கு அழைக்கும் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (08:41 IST)
துலீப் கோப்பையைக்கான இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நொய்டா மைதானத்தில் தான் இந்த சப்மவம் நடந்துள்ளது. 

 
மைதானத்தில், 20 அடி பேனரில், இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரராக திகழ்ந்த கவுதம் காம்பீரை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று  அவரது ரசிகைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
கவுதம் காம்பீர், கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த அவரை 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டி வைத்தனர். அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக முயற்சி செய்து வருகிறார். 


 
 
இந்நிலையில், மைதான கேலரில் கடும் வெயிலில் பேனரை வைத்துக்கொண்டு போட்டியை பார்த்த ரசிகைகளின் மீது காம்பீரின் பார்வை விழுந்தது. பின், அந்த ரசிகைகளுக்கு தண்ணீர் வழங்கும்படி மைதான ஊழியர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

விளையாட்டு விதியின்படி போட்டி நடக்கும்போது எந்த ரசிகர்களையும் வீரர்கள் பார்க்கக்கூடாது என்பதால், தனக்கு பேனர் வைத்த ரசிகர்களை காம்பீர் அப்போது சந்தித்து பேசவில்லை.
 
துலீப் கோப்பையைக்கான இறுதிப் போட்டியில் கவுதம் காம்பீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments