Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் காதலியுடன் ஓட்டம் : தாயாரை நிர்வாணப்படுத்தி கொடுமை

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (16:29 IST)
இளம்பெண்ணை காதலித்து, அவரை கூட்டிக் கொண்டு ஓடி விட்டதால், கோபமடைந்த பெண் வீட்டார், அந்த ஆணின் தாயை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரி மாவட்டத்தை சேர்ந்த கோத்வாலி கிராமத்தில் வசிக்கும் ஒரு வாலிபர், அதே கிராமத்தில் வசிக்கும் பெண்ணை காதலித்துள்ளார். அவர்களின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார்கள் என்று கருதிய அவர்கள் சமீபத்தில் அந்த கிராமத்திலிருந்து ஓடி விட்டனர். 
 
இதனால் கோபமடைந்த பெண் வீட்டார்கள், அந்த வாலிபரின் 60 வயது தாயை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்துள்ளனர். அவரின் உடல் முழுவதும் கரி பூசி அசிங்கப்படுத்தியுள்ளனர். அதன்பின்னும் ஆத்திரம் அடங்காத அவர்கள், அவரின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவி கொடுமை செய்துள்ளனர்.
 
இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுக்கப்படட்து. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான ஐந்து பேரை அவர்கள் தேடி வருகிறார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments