Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் காதலியுடன் ஓட்டம் : தாயாரை நிர்வாணப்படுத்தி கொடுமை

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (16:29 IST)
இளம்பெண்ணை காதலித்து, அவரை கூட்டிக் கொண்டு ஓடி விட்டதால், கோபமடைந்த பெண் வீட்டார், அந்த ஆணின் தாயை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரி மாவட்டத்தை சேர்ந்த கோத்வாலி கிராமத்தில் வசிக்கும் ஒரு வாலிபர், அதே கிராமத்தில் வசிக்கும் பெண்ணை காதலித்துள்ளார். அவர்களின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார்கள் என்று கருதிய அவர்கள் சமீபத்தில் அந்த கிராமத்திலிருந்து ஓடி விட்டனர். 
 
இதனால் கோபமடைந்த பெண் வீட்டார்கள், அந்த வாலிபரின் 60 வயது தாயை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்துள்ளனர். அவரின் உடல் முழுவதும் கரி பூசி அசிங்கப்படுத்தியுள்ளனர். அதன்பின்னும் ஆத்திரம் அடங்காத அவர்கள், அவரின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவி கொடுமை செய்துள்ளனர்.
 
இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுக்கப்படட்து. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான ஐந்து பேரை அவர்கள் தேடி வருகிறார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை.. தீவிரவாதியா?

சில ரகசியங்களை பகிர முடியாது என மத்திய அரசு கூறியது: ராகுல் காந்தி பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments