Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவிலும் பொருளாதாரத்தில் உயர்ந்த இந்தியா! – நிதியமைச்சர் பெருமிதம்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (11:19 IST)
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலுக்கான உரையை வாசித்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரம் குறித்து பெருமிதமாக கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்பட்ஜெட் மீதான அறிமுக உரையை வாசித்து வருகிறார்.

அதில் அவர் “உலகின் பெரிய நாடுகளில் இந்தியாவே மிக வேகமாக பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தற்சார்பு இந்தியா திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் அளிப்பதை கொள்கையாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “மேக் இன் இந்தியா திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். One station, One product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும். நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments