Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி: 7 லட்சம் பேர் முன்பதிவு!

இன்று முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி: 7 லட்சம் பேர் முன்பதிவு!
, திங்கள், 3 ஜனவரி 2022 (07:27 IST)
நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 7 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சிறுவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்
 
அதன்படி பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தார். மேலும் கோவின் இணையதளத்தில் இதற்கான முன்பதிவுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் இதுவரை 7 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக முன் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?