Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் தமிழ் உள்பட 13 மொழிகளில் தீர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2023 (08:06 IST)
இன்று முதல் தமிழ் உள்பட 13 மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மேலும் மொழிபெயர்ப்பு பணிக்காக அவர் ஒரு குழுவையும் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி வரும் நிலையில் தமிழ் உள்பட மாநில மொழிகளிலும் வெளியாக வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது 
 
இந்த நிலையில் ஜனவரி 26 முதல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தமிழ் உள்பட 13 மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
 
இதுவரை 34,000 தீர்ப்புகள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் தமிழில் மட்டும் 52 தீர்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் தீர்ப்புகளின் மொழியாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments