Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் புதிய கட்டணங்கள் அமல்: வாடிக்கையாளர்களை அதிரச்செய்யும் எஸ்பிஐ அறிவிப்பு

Webdunia
புதன், 31 மே 2017 (22:45 IST)
ஜூன் 1 முதல் அதாவது நாளை முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இனிமேல் வங்கி கணக்கே வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு இருக்கின்றது இந்த அறிவிப்பு. இதோ எஸ்பிஐ வங்கியின் புதிய கட்டணங்கள் குறித்த விபரங்கள்:




 


* வங்கிகளில் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

* இலவச முறைகளுக்கு மேல் ஏடிஎம்களில் பணத்தை எடுக்க, தற்போது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ.,

* அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களில் எடுத்தால் 10 ரூபாயும், பிற ஏடிஎம்களில் எடுத்தால் 20 ரூபாயும் சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும்.

* நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு எஸ்பிஐ ஏடிஎம்களில் 5 முறையும், பிற ஏடிஎம்களில் 3 முறையும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

* நகரங்கள் அல்லாத கணக்குகளுக்கு எஸ்பிஐ ஏடிஎம்களில் 10 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 5 முறை பணம் எடுக்கலாம்.

* ஜூன் 1 முதல் கணக்கின் உரிமையாளர் 10 காசோலைகளைக் கொண்ட செக் புக் வாங்க 30 ரூபாயும், 25 காசோலைகளைக் கொண்ட புத்தகத்திற்கு 75 ரூபாயும், 50 கொண்ட புத்தகத்திற்கு 150 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

* Buddy e-wallet பயனாளர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்கும் சேவையை 25 ரூபாய் கட்டணத்துடன் அறிமுகம் செய்துள்ளது.

* இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யூபிஐ, யூஎஸ்எஸ்டி முறைகளில் IMPS பணப் பரிமாற்றம் செய்யும் போது 1 லட்சம் ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments