உபியில் தொடரும் அவலம்: மனைவியன் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவர்

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (17:54 IST)
உத்தரபிரேதசத்தில் அம்புலன்ஸ் இல்லாததால் இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

 
 
உபியில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்காததால் இறந்த மனைவியின் உடலை கணவர் தோளில் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. படூன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று திடீரென உயிரிழந்தார்.
 
இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்ணின் கணவருக்கு ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளது. இதனால் அவர் தனது தோளில் இறந்த மனைவியை சுமந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற டெம்போ ஓட்டுனரிடம் தன்னை தனது வீட்டில் இறக்கிவிடும் படி கெஞ்சிய காட்சிகள் காண்போர் நெஞ்சங்களை பதைபதைக்க வைக்கிறது. 
 
இச்சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது, இதை அடுத்து அம்மருத்துவமனையின் நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உத்தரபிரேதசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments