Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறந்தநாள் விழாவில் சக மாணவியை பலாத்காரம் செய்த நண்பர்கள்

பிறந்தநாள் விழாவில் சக மாணவியை பலாத்காரம் செய்த நண்பர்கள்
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (16:29 IST)
மும்பையில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது நண்பர்கள் பிறந்தநாள் விழாவில் மது கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை உள்ள கோப்ரியில் கடந்த செப்டம்பர் 30 ம் தேதி 10 ம் வகுப்பு படிக்கும் மாணவியை சக மாணவன் தன்னுடைய பிறந்தநாள் என்று கூறி மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை வற்புருத்தி மது அருந்த வைத்த அவர்கள் மது போதையில் மயக்கம் அடைந்த அவளை அடித்து காயப்படுத்தி மேலும் இரு மாணவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த பலாத்கார சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, அக்டோபர் 10-ம் தேதி வரையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், சோதனை முடிவுகள் வந்ததும் முறையான விசாரணை துவங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil