Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.251 ஸ்மார்ட்போன் 28ஆம் தேதி முதல் விநியோகம்

Webdunia
புதன், 15 ஜூன் 2016 (13:49 IST)
மத்திய அரசு ஆதரவுடன், ரிக்கிங் பெல்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பிரீடம் 251 ஸ்மார்ட்போன் வருகிற 28ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரிங்கிக் பெல்ஸ் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் ‘பிரீடம் 251’ என்ற பெயரில் ரூ.251 க்கு ஸ்மார்ட்போனை வழங்குவதாக அறிவித்தது. அதை வாங்க விரும்புகிறவர்கள் இணையதளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.
 
இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு விண்ணப்பித்தனர். ஆனால், இது தொடர்பாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஏராளமான பேருக்கு செலுத்திய பணத்தை திருப்பி அளித்தது ரிக்கிங் பெல்ஸ் நிறுவனம். மத்திய அரசின் விசாரனை வட்டத்தில் இந்நிறுவனம் உள்ளது. 
 
இதுவரை 7 கோடி பேர் கேஷ் ஆன் டெலிவரி வகையிலும், 30 ஆயிரம் பேர் பணம் கொடுத்தும் முன்பதிவு செய்துள்ளனர். எனவே வருகிற 28ஆம் தேதி முதல் கட்டமாக, முதலில் முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்மார்ட்போன் விநியோகிக்கப்படும் என்று ரிக்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments