Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 19 மே 2025 (10:59 IST)
தமிழகத்தில் சில ஆண்டுகளாக பெண்களுக்கு இலவச பேருந்து சேவை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆந்திராவிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற சேவையை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
 
ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வரும் நிலையில், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பதே ஆகும். அந்த வாக்குறுதியை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று முதல் அமல்படுத்த இருப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
 
ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 11,216 பேருந்துகளில், ஆகஸ்ட் 15 முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம் உள்பட சில மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதேபோல் தற்போது ஆந்திராவிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments