Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (16:33 IST)
இந்த ஆண்டு தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்றாவது அலை ஒருவேளை உருவானால் தேதி மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கூடுதல் தேர்வு மையங்கள் இந்த ஆண்டு அமைக்கப்படும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது அதன்படி தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டு 4 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
செங்கல்பட்டு விருதுநகர் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய நான்கு நகரங்களில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வு மையங்கள் வழக்கம்போல் இந்த ஆண்டும் நடைபெறும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments