Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்!

4 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2016 (10:08 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து நான்கு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்றை அதன் தாய் கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


 
 
கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி ஜெய்பூரில் 4 மாத பெண் குழந்தையின் உடல் ஒரு வீட்டில் உள்ள பெட்டியில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
 
தடயவியல் பரிசோதனையின் மூலம் குழந்தையின் ரத்தம் அதன் தாயின் கை நகங்களில் உறைந்திருந்ததை கண்டுபிடித்தனர் காவல்துறையினர். பின்னர் காவல்துறையினர் அந்த பெண்ணை விசாரித்ததில், ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பெண் குழந்தை பிறந்ததால், அதை கழுத்தை நெரித்து கொன்றதாக கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
 
அந்தப் பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments