Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிபுராவில் கனமழையால் நிலச்சரிவு: 4 பேர் பலி

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (17:45 IST)
திரிபுராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
 
வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் திரிபுரா மாநிலத்தில் பெய்து வந்த கனமழையால் அங்குள்ள பல்வேறு தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேவேலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் சேறு மற்றும் மண் சரிந்து மூடியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்நிலையில், அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைவில் நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த ஆய்வின் போது முதல்வருடன் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments