Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷ்மா ஸ்வராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும்: ப.சிதம்பரம்

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2015 (00:32 IST)
முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி பற்றி பொய்யான தகவல்களை, நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 
 

 
இது குறித்து, டெல்லியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவியதாக விவகாரத்தில் உண்மைகளை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைக்கிறார்.
 
லலித் மோடிக்கு மனிதாபிமான வகையில் உதவி செய்துள்ளதாக கூறும், அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உண்மையில்யே விரும்பி இருந்தால், போர்ச்சுக்கல் நாட்டுக்கு மட்டும் சென்று வரும் வகையில், பிரிட்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனர் அலுவலகத்தில் தற்காலிக பயண ஆவணங்கள் கேட்டு விண்ணப்பிக்க, லலித் மோடியிடம் கூறி இருக்கலாம்.
 
ஆனால், அதைவிடுத்து, இந்திய ஆவணங்களுக்குப் பதில், லலித் மோடிக்கு, பிரிட்டன் ஆவணங்கள்தான் தேவை என்று சுஷ்மா ஸ்வராஜ் வெளிப்படையாக செயல்பட்டது நன்கு தெரிகிறது. எனவே, இதில் எதையோ சுஷ்மா ஸ்வராஜ் மறைக்கப் பார்க்கின்றார். இது குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு பதில், நீண்ட பிரசங்கத்தை தான் சுஷ்மா ஸ்வராஜ் செய்தார்.
 
முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி பற்றி பொய்யான தகவல்களை, நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். 

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments