Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருக்கு பன்றி காய்ச்சல்

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2015 (09:45 IST)
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான,  அசோக் கெலாட் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இங்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் பன்றி காய்ச்சல் நோய் காரணமாக அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
 
இதுகு றித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 
 
“பரிசோதனை செய்ததில் எனக்கு பன்றிக்காய்ச்சலுக்கு காரணமான எச்1என்1 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சை காரணமாக உடல்நலம் தேறி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments