Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர்: சிக்கலில் மோடி?

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (07:55 IST)
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மோடியின் அதிருப்தியாளர்கள் பலர் பாஜகவில் இருந்து விலகி வருகின்றனர். அதேபோல் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஒருசில கட்சிகளும் விலகி வருகின்றன. இதனால் பிரதமர் மோடிக்கும் பாஜகவிற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜிகாங் அபாங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். கடந்த 1980 முதல் 1999 வரையும் அதன் பின்னர் 2003 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலும் இவர் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கொள்கைகளை தற்போதைய பாஜக கடைபிடிக்கவில்லை என்றும், அதனால் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் ஜிகாங் அபாங் தனது விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். ஜிகாங் அபாங் விலகலால் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக பலவீனமாகும் என கூறப்படுகிறது. பாஜகவில் இருந்து விலகியுள்ள ஜிகாங் அபாங் தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments