Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர்: சிக்கலில் மோடி?

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (07:55 IST)
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மோடியின் அதிருப்தியாளர்கள் பலர் பாஜகவில் இருந்து விலகி வருகின்றனர். அதேபோல் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஒருசில கட்சிகளும் விலகி வருகின்றன. இதனால் பிரதமர் மோடிக்கும் பாஜகவிற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜிகாங் அபாங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். கடந்த 1980 முதல் 1999 வரையும் அதன் பின்னர் 2003 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலும் இவர் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கொள்கைகளை தற்போதைய பாஜக கடைபிடிக்கவில்லை என்றும், அதனால் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் ஜிகாங் அபாங் தனது விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். ஜிகாங் அபாங் விலகலால் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக பலவீனமாகும் என கூறப்படுகிறது. பாஜகவில் இருந்து விலகியுள்ள ஜிகாங் அபாங் தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments