Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு மாணவர்களைப் பல்கலைக் கழகங்களில் சேர்க்க அனுமதி பெறுவது கட்டாயம்: யுஜிசி உத்தரவு

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2014 (14:41 IST)
இந்தியப் பல்கலைக் கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது பல்கலைக் கழக மானியக் குழுவிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. 
 
இது குறித்து அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி செயலர் எஸ். ஜஸ்பால் சாந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
“சில பல்கலைக் கழகங்களும், இணைப்புக் கல்லூரிகளும் நேரடியாகவும், முகவர்கள் மூலமாகவும் தங்களுடைய கல்வித் திட்டங்களில் வெளிநாட்டினரைச் சேர்த்து வருகின்றனர்.
 
இந்த நடைமுறைகளில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியப் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
 
அத்துடன், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இதுபோன்ற மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் பல்கலைக் கழகங்கள் இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் 
 
மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது பல்கலைக் கழக மானியக் குழுவிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும் என்று தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments