Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த பயணிகள் நடைபாதை: பலர் காயம் என தகவல்

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (20:40 IST)
மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள பயணிகள் நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் காயம் என முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது
 
சற்றுமுன் மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள பயணிகள் நடை மேம்பாலத்தில் ஒரே நேரத்தில் அதிக கூட்டமாக பயணிகள் நடைபாதையை கடக்க முயன்றதால் பயணிகளின் பாரம் தாங்காமல் சரிந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதுவரை 16 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் மும்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்னும் மீட்புப்பணிகள் நடந்து வருவதால் காயம் அடைந்தவர்களின் எண்ணிகை குறித்த முழுவிபரங்கள் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments