Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் மழைக்கே இந்த நிலையா? முடங்கியது மும்பை!

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (16:19 IST)
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்கியுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் தெலுங்கானா, ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
 
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அடுத்த நான்கு நாட்களுக்கு மிக பலத்த மழை பொழியும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
மும்பையில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 
 
ஒரு நால் மழைக்கே மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பையில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  
 
மேலும், அங்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினரும் துணை ராணுவப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் எம்பி ஆஜர்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பெரியார் சொன்னார்னு கர்ப்பப்பையை ஏன் அறுத்துக்கல..? - சீமான் பேச்சால் மீண்டும் சர்ச்சை!

செல்போனை கொடுக்காவிட்டால் கொலை செய்வேன்.. தலைமை ஆசிரியரை மிரட்டிய பள்ளி மாணவன்..!

குடியுரிமை மறுப்பு விவகாரம்: டிரம்ப் உத்தரவை எதிர்த்து 22 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு..!

தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாததால் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments