Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒடிசாவில் மழை நீடிப்பு: 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

ஒடிசாவில் மழை நீடிப்பு: 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது
, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2014 (14:15 IST)
ஒடிசா மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதுவரை 35 பேர் பலியாகி விட்டனர்.
மகாநதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. கரையோர மாவட்டங்களில் வெள்ளம் புகுந்து இருப்பதால் 18 லட்சம் மக்கள் தவிக்கிறார்கள்.
 
அங்கு மீட்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பகுதிகளை முதலமைச்சர் நவீன் பட்நாயக் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil