சாலையில் தண்ணீர் தேக்கம்… ஐடி நிறுவனங்களுக்கு லீவ்!!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (11:33 IST)
பெங்களூரில் பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

 
பெங்களூரில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் விமான நிலையங்களில் கூட மழைநீர் தேங்கி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரில் ஐடி ஊழியர்கள் சாலை வழியாக செல்ல முடியாததால் பெங்களூர் ஐடி நிறுவனங்களுக்கு ஒரே நாளில் ரூபாய் 225 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து பெங்களூர் ஐடி நிறுவனங்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் பெங்களூர் ஐடி நிறுவன ஊழியர்கள் போக்குவரத்துக்கு வழி இல்லாத காரணத்தினால் டிராக்டரில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் வெள்ளநீர் வடியாததால் ஊழியர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறிய அளவில் உயர்ந்த பங்குச்சந்தை.. நேற்று போல் ஏமாற்றம் தருமா?

இன்று ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.94,000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

ஒரு மாதத்தில் இணைப்பு நடக்காவிட்டால் புதிய கட்சி.. ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி..!

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments