Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் தண்ணீர் தேக்கம்… ஐடி நிறுவனங்களுக்கு லீவ்!!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (11:33 IST)
பெங்களூரில் பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

 
பெங்களூரில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் விமான நிலையங்களில் கூட மழைநீர் தேங்கி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரில் ஐடி ஊழியர்கள் சாலை வழியாக செல்ல முடியாததால் பெங்களூர் ஐடி நிறுவனங்களுக்கு ஒரே நாளில் ரூபாய் 225 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து பெங்களூர் ஐடி நிறுவனங்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் பெங்களூர் ஐடி நிறுவன ஊழியர்கள் போக்குவரத்துக்கு வழி இல்லாத காரணத்தினால் டிராக்டரில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் வெள்ளநீர் வடியாததால் ஊழியர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments