Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு: கர்நாடகாவில் தொடரும் குழப்பமான சூழல்

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (09:22 IST)
கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் கொடுத்த 5 எம்.எல்.ஏ.க்கள், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகாவின் முதலமைச்சர், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசின் 16 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் சபாநாயகர்களால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இது தொடர்பாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 10 பேர் தொடர்ந்த வழக்கில், வரும் 16 ஆம் தேதி வரை எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என சபாநாயருக்கு தடை விதித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்களில் ஆனந்த் சிங், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், முனிரத்னா, ரேஷன் பெய்க் ஆகிய 5 பேர் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

16 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் குமாரசாமி அரசின் பெரும்பான்மை பலம் 101 ஆக குறைந்துள்ளது என்பதும், அதே சமயம் பாஜகவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments