Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. 2 ராணுவ வீரர்கள் காயம்..!

Siva
வியாழன், 19 டிசம்பர் 2024 (11:44 IST)
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இரண்டு ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று இரவு தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்த போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டனர். இதனை அடுத்து, பதிலுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையும் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments