Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு..! – மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick
ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (12:20 IST)
இந்தியின் பிரபல நடிகரான சல்மான் கான் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியில் பிரபலமான 3 கான் நடிகர்களில் ஒருவர் சல்மான்கான். மானை சுட்ட வழக்கில் சிறை சென்ற சல்மான்கான் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ரசிகரை அடித்தது, சாலையோரம் தூங்கியவர்கள் மீது காரை விட்டு ஏற்றியது என இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. சமீபத்தில் ரம்ஜானுக்கு சல்மான்கானுக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் குவிந்த நிலையில் போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில் தற்போது சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் சல்மான்கான் வீட்டின் முன்பு வந்த மர்ம நபர்கள் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, சல்மான்கான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. சல்மான்கானுக்கு யாராவது கொலை மிரட்டல் விடுப்பதற்காக இவ்வாறு செய்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் மும்பையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Edit by Prasanth.K

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments