Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்க்கிங் பிரச்சனையில் ஒருவருக்கு துப்பாக்கி சூடு

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2018 (11:37 IST)
டெல்லியில் உள்ள பாரில் வாகன பார்க்கிங் தொடர்பாக நடந்த தகராறில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள மதுபான பாரில்  இன்று அதிகாலை 3.30 மணிக்கு, புத்தாண்டு நிகழ்ச்சியில் குடித்து விட்டு வெளியே வந்த வினய், உமேஷ் ஆகிய இருவரும் வாகன நிறுத்தத்தில் இருந்த தங்களது வாகனத்தை எடுக்கும் போது இருவரது வாகனமும் மோதியது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு உண்டானது. வாய்ச்சண்டை முற்றியதால் உமேஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து  வினையை நோக்கி சுட்டுள்ளார். வினய் கழுத்தில் குண்டு பாய்ந்து கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் வினையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபான பார்களை நள்ளிரவு 1 மணியுடன் மூட வேண்டும் என்ற விதிமுறையை மீறி அதிகாலை 3.30 மணி வரை செயல்பட்ட பாரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

தெரு நாய்கள் விவகாரம்: உள்ளூர் அமைப்புகளின் அலட்சியத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments