Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 11 பேர் பலி..100க்கும் மேற்பட்டோர் படுகாயம்- அரசு நிவாரண நிதி அறிவிப்பு

Sinoj
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (18:21 IST)
மத்திய பிரேதேசத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள  நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ள மத்திய பிரதேச அரசு.

மத்திய பிரேதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஹர்தா என்ற பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட  வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பெரும் விபத்தில் பலத்த காயமடைந்த 100 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் தீப்பரவியதால் குடியிருப்புவாசிகள் பயத்தில் உள்ளனர்.

மேலும், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ள மத்திய பிரதேச அரசு, இவ்விபத்து குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments