Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பலில் தீ விபத்து: கடற்படை என்ஜினியர் உயிரிழப்பு

இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பலில் தீ விபத்து: கடற்படை என்ஜினியர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 7 மார்ச் 2016 (11:02 IST)
இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஐஎன்எஸ் விராட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கடற்படை தலைமை என்ஜினியர் உயிரிழந்தார்.


 

 
ஐஎன்எஸ் விராட் போர் கப்பல் கோவா கடற்பகுதியில் தனது பணிகளை மேற்கொண்டிருந்தது.
 
அப்போது, அந்த கப்பலின் பாய்லர் அறையில், நீராவி கசிசு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதில் தீ விபத்து ஏற்பட்டது.
 
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர், அப்போது பாய்லர் அறையில் இருந்து வெளியே வந்த புகையினை சுவாசித்த 4 மாலுமிகள் மயங்கி விழுந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான கடற்படை தலைமை மெக்கானிக்கல் என்ஜினியர் அசு சிங் கோவாவில் உள்ள கடற்படை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.


 

 
ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். மயக்கமடைந்த மற்ற மாலுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
சிகிச்சை பெறும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

Show comments