நிதி மோசடியில் இருந்து மக்களை காக்க தனி சட்டம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் நிதி மோசடியால் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் புதிய மாதிரி தனிச்சட்டத்தை அமைக்க வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் வீரப்ப மொய்லி தலைமையிலான குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மக்களவை சபாநாயகரிடம் இந்தக் குழு அளித்துள்ள பரிந்துரையின் சாரம்சங்கள்
1. மோசடியான பணச் சுழற்சி திட்டங்களை தடுக்க வேண்டும்
2. நிதி வசூலிப்பு குறித்த தெளிவான விதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்
3. அனைத்து வகையான நிதித் திட்டங்களை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
4. திட்டங்களை நடத்தி மக்களை ஏமாற்றுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்