மேக்சிமம் கடன் மோசடி தமிழகத்தில்... கணக்கு காட்டும் நிர்மலா சீதாராமன்!

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (10:13 IST)
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன் பெற்று மோசடி செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY) சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தக் கடன் திட்டம் அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 
 
கடந்த 2015 - 2016 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் மக்களவையில் முத்ரா கடன் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். 
நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளதாவது, முத்ரா கடன் திட்டம் துவங்கப்பட்டு கடந்த ஜூன் 21 ஆம் தேதி வரை ரூ.19 கோடிக்கும் அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,313 மோசடிகளும் நடந்துள்ளது. 
 
முத்ரா கடன் திட்டதில் வழங்கப்பட்ட கடனின் தமிழஜ்கத்தில் அதிகபட்சமாக 344 மோசடிகள் நடந்துள்ளன. இதை தொடர்ந்து சண்டிகரின் 275 மோசடிகளும், ஆந்திராவில் 241 மோசடிகளும் நடந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments