Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு ரத்து?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (10:41 IST)
உக்ரைனில் மருத்துவம் படித்த இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
ரஷ்யாவுடனான போர் காரணமாக உக்ரைனின் சிக்கிய இந்தியர்கள் மத்திய அரசால் மீட்கப்பட்டனர் என்பதும் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் பலர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வி குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. 
 
இந்நிலையில் உக்ரைனில் மருத்துவம் படித்த இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ரத்து குறித்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு உக்ரைன் நாட்டு பல்கலைக்கழகங்கள் தகவல் அளித்துள்ளன. 
 
3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-1 தேர்வை உக்ரைன் பல்கலைக்கழகங்கள் ஓராண்டு தள்ளி வைத்துள்ளன. 5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-2 தேர்வை ரத்து செய்தும் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இறுதியாண்டு KROK-2 தேர்வு எழுதாமலேயே மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments